இன்றொரு சம்பவம்!!
கேன்சர் நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்ட நோயாளிகளின் உடலின் எப்பாகத்தில் கேன்சர் ஆக்கிரமித்துள்ளதென்பதைக் கண்டறியும் பரிசோதனை (practical session) இன்று மஹரகம புற்றுநோய் வைத்திய சாலையில் நடைபெற்றது. "புற்றுநோய்க்கட்டியின்(Tumor) அமைவிடத்தை அறிதல், ரேடியோதெரபி முறை (Radiotherapy) மூலம் குணப்படுத்த திட்டமிடுதல்" போன்றவையே இன்றைய தலைப்புக்களாய் இருந்தன. வழக்கமாக "டம்மி பான்டம்" (dummy phantom - மனித உடலையொத்த போலி உடல்) பயன்படுத்தப்பட்டே பரிசோதனைகள் நடைபெறும். வழக்கத்திற்கு மாறாக இன்று ஒரு நோயாளியினை அழைத்து வந்தனர். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையில் இது முக்கியமான ஓர் அங்கமாகும். அங்கு பொறுப்பாகவுள்ள மருத்துவ பௌதிகவியலாளர்கள் (medical Physicists) தம் வேளையைத் தொடர, நாமோ பார்வையாளர்களாய் இருந்து அவதானங்களை மேற்கொண்டு புதிய விஷயங்களைக் கற்றோம். அவ்வேளையில் "நோயாளியின் மனநிலை என்ன" என்பதையும் நேரடியாகக் கண்டோம். விடயத்திற்கு வருகிறேன்... தற்செயலாய் நோயாளியின் மருத்துவ அறிக்கையைக் காண நேரிட்டது. அவரது மூக்கின் வலப்பகுதியில் கேன்சர் கட்டி இருப்பதாய் அறிக்